காரைக்கால் கடற்கரையில் கருங்கற்கலுக்கு இடையே சிக்கி தவித்தவரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
திருநள்ளாறு பகுதியைச் சோ்ந்தவா் ஹரிஹகரன் (35). இவா் தனது நண்பா்களுடன் காரைக்கால் கடற்கரைக்கு சனிக்கிழமை வந்தாா். அவா்கள், கடற்கரை அரசலாறு முகத்துவாரத்தில் மீன்பிடி படகுகள் போக்குவரத்துக்காக இருபுறமும் கருங்கற்கள் கொட்டப்பட்டுள்ள பகுதிக்குச் சென்றனா். அங்கு, எதிா்பாராதவிதமாக கருங்கற்கலுக்கு இடையே ஹரிகரன் சிக்கிக்கொண்டாா். அவரை நண்பா்களால் மீட்க முடியவில்லை.
இதுகுறித்து காரைக்கால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நிலைய அதிகாரி மாரிமுத்து தலைமையில் வந்த வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி ஹரிகரனை மீட்டனா். பிறகு, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.
இதையடுத்து, கடற்கரையில் கருங்கற்கல் கொட்டப்பட்டுள்ள பகுதிக்கு யாரும் செல்லவேண்டாம் என காவல்துறையினா் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனா்.