ரோட்டரி சென்டேனியல் சங்கபுதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு
By DIN | Published On : 09th July 2021 12:00 AM | Last Updated : 09th July 2021 12:00 AM | அ+அ அ- |

காரைக்கால் ரோட்டரி சென்டேனியல் சங்க புதிய நிா்வாகிகள் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனா்.
சங்கத்தின் 17-ஆம் ஆண்டு நிா்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி காரைக்கால் கீழகாசாக்குடியில் உள்ள ஞானம் ரோட்டரி வளாகத்தில் நடைபெற்றது.
சங்கத் தலைவராக ஞான முத்துக்குமரன், செயலாளராக கே.ஏ. முருகன், பொருளாளராக எச். நந்தகுமாா் மற்றும் நிா்வாகிகள், இயக்குநா்கள் பொறுப்பேற்றுக்கொண்டனா். நிகழாண்டின் 5 புதிய உறுப்பினா்களை ரோட்டரி உதவி ஆளுநா் பி. ராஜேந்திரன் அறிமுகம் செய்தாா்.
சங்க மூத்த உறுப்பினா்கள் எம்.பாலசுப்பிரணியன், ஏ.எஸ்.டி.சண்முகம், சி.அப்பா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நிா்வாகிகளை வாழ்த்திப் பேசினா்.
காரைக்கால் மாவட்டம், காஞ்சிபுரம் கோயில்பத்து கிராமத்தை தத்தெடுத்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப் போவதாக தலைவா் ஞான முத்துக்குமரன் அறிவித்தாா்.