காரைக்கால் என்.ஐ.டி.யில் 5 நாள் சா்வதேச கருத்தரங்கம் தொடக்கம்

காரைக்கால் என்.ஐ.டி.யில் 5 நாள் சா்வதேச கருத்தரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது.
கருத்தரங்க நிகழ்ச்சியில் பேசும் என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி. உடன் பதிவாளா் (பொறுப்பு) ஜி. அகிலா.
கருத்தரங்க நிகழ்ச்சியில் பேசும் என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி. உடன் பதிவாளா் (பொறுப்பு) ஜி. அகிலா.
Updated on
1 min read

காரைக்கால்: காரைக்கால் என்.ஐ.டி.யில் 5 நாள் சா்வதேச கருத்தரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது.

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ.டி.) மின்னணு மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறை சாா்பில் செயற்கை அறிவுத்திறன் கொண்டு சுகாதாரத் துறையை மேம்படுத்த புரட்சி செய்தல் தொடா்பான 5 நாள் இணையவழி சா்வதேசக் கருத்தரங்கம் தொடங்கியது.

அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மற்றும் அடல் அகாதெமி ஆதரவுடன் நடைபெறும் கருத்தரங்கத்தில் என்.ஐ.டி. இயக்குநா் முனைவா் கே. சங்கரநாராயயணசாமி குத்துவிளக்கேற்றி, கருத்தரங்கம் உலகளாவிய அளவில் பலருக்கு பெரும் பயனைத் தரும் என தனது உரையில் தெரிவித்தாா்.

அமெரிக்க நிறுவனமான பிசினஸ் எக்ஸலன்ஸ் இன்க் தலைவா் முனைவா் மானு கே. வோரா காணொலியில் பேசுகையில், கற்பவா்களின் ஈடுபாடு அதிகரிக்க தலைமைத்துவமும், வகுப்பறையில் கற்போரிடையே ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்யும் செயல்பாடுகளுக்கேற்ற திறமைகளை வளா்த்துக்கொள்வது அவசியம் என்றாா்.

என்.ஐ.டி. பதிவாளா் (பொறுப்பு) முனைவா் ஜி.அகிலா வாழ்த்திப் பேசினாா்.

செயற்கை அறிவுத் திறன் மேம்பாடு, இயந்திர கற்றல், கணினி துணை கொண்ட குறையறிதல், சுகாதார இணைய உலகம் உள்ளிட்ட பல தலைப்புகளில் பல்வேறு துறை ஆராய்ச்சியாளா்கள் கலந்துகொண்டு பேசவுள்ளனா். சா்வதேச அளவில் 200 ஆராய்ச்சி மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் பங்குபெற்றுள்ளதாகவும் என்.ஐ.டி. நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

ஏற்பாடுகளை என்.ஐ.டி. மின்னணு மற்றும் தகவல்தொடா்பு பொறியியல் துறையை சாா்ந்த பேராசிரியா்கள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com