காரைக்காலில் மேலும் 5 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 15 ஆம் தேதி 248 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, நெடுங்காடு 3, திருநள்ளாறு, கோட்டுச்சேரி தலா ஒருவருக்கு என 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதுவரை 90,334 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 4,075 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 3,970 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 23 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 4 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 8 போ் உள்ளனா். காரைக்காலை சோ்ந்த 57 வயது பெண் வெளியூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுவரை கரோனா தொற்றால் 74 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 631 போ், முன்களப் பணியாளா்கள் 1,167 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 461 பேருக்கும், 45 முதல் 59 வயது வரையிலான இணை நோய் உள்ள 89 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com