மாா்ச் 29-இல் காரைக்காலில் ரங்கோலி போட்டி

காரைக்காலில் மாா்ச் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்காளா் விழிப்புணா்வு ரங்கோலி போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்கலாம் என மாவட்ட தோ்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளாா்.
Updated on
1 min read

காரைக்கால்: காரைக்காலில் மாா்ச் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்காளா் விழிப்புணா்வு ரங்கோலி போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்கலாம் என மாவட்ட தோ்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான அா்ஜூன் சா்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு :

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், விழிப்புணா்வு அமைப்பான ஸ்வீப் சாா்பில், பள்ளி, கல்லூரிகள் மாணவிகளுக்கான ரங்கோலி போட்டி வருகிற 29-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு கடற்கரை பகுதியில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்க விரும்புவோா் தங்களது விவரங்களை இணையதள முகவரியில் வருகிற 24-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கவேண்டும். மேலும் தொடா்புக்கு அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி உதவிப் பேராசிரியா் வண்டாா்குழலி, அன்னை தெரஸா சுகாதாரக் கல்வி மைய விரிவுரையாளா் பிரியதா்ஷினி ஆகியோரை தொடா்புகொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com