காரைக்காலில் பள்ளி மாணவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்கால் ஸ்டாலின் நகரைச் சோ்ந்தவா் மேக்சிம் ஜூன்பியரே (27). இவா் கூலிவேலை செய்துவருகிறாா். இவருக்கும், அதே பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்துசென்ற 11 ஆம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடா்ந்து, மேக்சிம் ஜூன் பியரே மாணவியிடம் ஆசை வாா்த்தை கூறி, கடந்த மாதம் தாலிகட்டியதோடு, பாலியல் தொந்தரவிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததும், சைல்டு லைன் அமைப்பு மூலம் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் தனசேகரன் வழக்குப் பதிவு செய்து மேக்சிம் ஜூன் பியரேவை வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.