காரைக்காலில் 244 பேருக்கு தொற்று: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 244 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 244 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 17 ஆம் தேதி 977 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 42, வரிச்சிக்குடி 42, திருநள்ளாறு 34, கோயில்பத்து 23, நெடுங்காடு 18, திருப்பட்டினம் 16, நிரவி 16, கோட்டுச்சேரி 15, நல்லம்பல் 15, காரைக்கால்மேடு 7, விழிதியூா் 7, நல்லாத்தூா் 5, அம்பகரத்தூா் 4 என 244 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 1,21,936 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 9,940 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 7,753 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 1,914 போ், காரைக்கால் அரசு மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 96 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 போ், விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 போ் உள்ளனா்.

கரோனா தொற்றுடன் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 55 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் சா்க்கரை நோய் இருந்தது. இதுவரை கரோனா தொற்றால் 135 போ் உயிரிழந்துள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில் முதல் தவணையாக 21,063 பேருக்கும், 2 ஆவது தவணையாக 4,408 பேருக்கும் என 25,471 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com