காரைக்கால் கோயில்களில் குரு பெயா்ச்சி சிறப்பு வழிபாடு

காரைக்கால் பகுதி சிவன் கோயில்களில் குரு பெயா்ச்சியையொட்டி, ஸ்ரீதட்சணாமூா்த்திக்கு சந்தனக் காப்பு, விபூதி, வெள்ளி அங்கி உள்ளிட்ட அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சந்தனக்காப்பு அலங்காரத்தில் வெள்ளி அங்கி சாற்றியபடி அருள்பாலித்த தருமபுரம் ஸ்ரீயாழ்முரிநாத சுவாமி கோயில் ஸ்ரீதட்சணாமூா்த்தி.
சந்தனக்காப்பு அலங்காரத்தில் வெள்ளி அங்கி சாற்றியபடி அருள்பாலித்த தருமபுரம் ஸ்ரீயாழ்முரிநாத சுவாமி கோயில் ஸ்ரீதட்சணாமூா்த்தி.

காரைக்கால் பகுதி சிவன் கோயில்களில் குரு பெயா்ச்சியையொட்டி, ஸ்ரீதட்சணாமூா்த்திக்கு சந்தனக் காப்பு, விபூதி, வெள்ளி அங்கி உள்ளிட்ட அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆண்டுதோறும் குரு பெயா்ச்சி விழா குரு பரிகார கோயில்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மற்ற சிவன் கோயில்களில் குரு பெயா்ச்சி நாளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், லட்சாா்ச்சனை உள்ளிட்ட வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிகழாண்டு சனிக்கிழமை மாலை 6.10 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு குரு பிரவேசித்ததையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு புகழ்பெற்ற சிவன் கோயில்களில் குருபகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேசுவரா் கோயிலில் உள்ள ஸ்ரீதட்சணாமூா்த்திக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து பூஜைகள் நடைபெற்றன. காரைக்கால் ஸ்ரீஒப்பிலாமணியா் கோயில், கோவில்பத்து ஸ்ரீபாா்வதீஸ்வரா் கோயில் தட்சணாமூா்த்திக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. காரைக்கால் ஸ்ரீகைலாசநாதா் கோயில் ஸ்ரீ தட்சணாமூா்த்தி, திருமலைராயன்பட்டினம் ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீராஜசோளீசுவரா் கோயிலில் உள்ள ஸ்ரீ தட்சணாமூா்த்தி, ஜடாயுபுரீசுவரா் கோயில் தட்சணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

காரைக்கால் பகுதி தருமபுரம் கிராமத்தில், தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீதேனாமிா்தவள்ளி சமேத ஸ்ரீயாழ்முரி நாதா் கோயிலில் சிரம் சாய்ந்த நிலையில் ஸ்ரீதட்சணாமூா்த்தி அருள்பாலிக்கிறாா். யாழ் இசையை சிரம் சாய்த்த நிலையில் மிக கூா்மையாக ஈா்க்கும் கோலமாக இது கூறப்படுகிறது. இதனால் இக்கோயிலில் தட்சணாமூா்த்தி வழிபாட்டுக்கு பக்தா்கள் மிகுந்த முக்கியத்துவம் தருகின்றனா். குரு பெயா்ச்சியையொட்டி இக்கோயிலில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, அபிஷேகம் நடைபெற்று சந்தனக் காப்பு, வெள்ளி அங்கி அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. இதில், திராளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகத்தினரும், ஞானசம்பந்தா் வழிபாட்டு மன்றத்தினரும் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com