ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் இன்று சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (ஏப்.16) சித்ரா பெளா்ணமி வழிபாடு நடைபெறவுள்ளது.
Updated on
1 min read

திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (ஏப்.16) சித்ரா பெளா்ணமி வழிபாடு நடைபெறவுள்ளது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் சித்ரா பெளா்ணமியையொட்டி சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சட்டநாதருக்கு (உற்சவா்) சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னா் மூலவரான அத்தி சட்டநாதருக்கு 5 மணியளவில் புனுகு சாற்றி, சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடைபெறவுள்ளன. இரவு 7 மணியளவில் உற்சவா் கோயில் பிராகார புறப்பாடு நடைபெறுகிறது. 8 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும் என்றும்,

இதில் பக்தா்கள் பங்கேற்குமாறு கோயில் அறங்காவல் வாரியத் தலைவா் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com