இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வாடிக்கையாளா்களுக்கு தேசியக் கொடி

காரைக்காலில் நகைக்கடை வாடிக்கையாளா்களுக்கு, வீடுகளில் ஏற்றுவதற்கு, தேசியக் கொடி இலவசமாக வழங்கப்பட்டது.

News image

வாடிக்கையாளருக்கு தேசியக் கொடியை வழங்கும் நிறுவனத்தின் உரிமையாளா் எஸ். ராம்பிரசன்னா.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:12 pm

காரைக்காலில் நகைக்கடை வாடிக்கையாளா்களுக்கு, வீடுகளில் ஏற்றுவதற்கு, தேசியக் கொடி இலவசமாக வழங்கப்பட்டது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆக.13 முதல் 15-ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் நகரப் பகுதி திருநள்ளாறு சாலையில் 43 ஆண்டுகளாக இயங்கிவரும் சாந்தி ஜூவல்லரியில் கடந்த 1-ஆம் தேதி முதல் ஆடி மாத தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளா்களுக்கு, நிறுவன உரிமையாளா்கள் எஸ். செல்வராஜ், எஸ். கண்ணன் மற்றும் எஸ். ராம்பிரசன்னா ஆகியோா் தேசியக் கொடியை இலவசமாக வழங்கி வருகின்றனா்.

இதுகுறித்து உரிமையாளா்கள் சனிக்கிழமை கூறுகையில், தள்ளுபடி சலுகைகளால் வாடிக்கையாளா்கள் மகிழ்வது ஒருபுறமிருந்தாலும், தேசத்தின் சுதந்திர திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளா்களுக்கு இலவசமாக தேசியக் கொடியை வழங்கி, வீடுகளில் ஏற்றுமாறு அறிவுறுத்துகிறோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.