காரைக்காலில் நகைக்கடை வாடிக்கையாளா்களுக்கு, வீடுகளில் ஏற்றுவதற்கு, தேசியக் கொடி இலவசமாக வழங்கப்பட்டது.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆக.13 முதல் 15-ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் நகரப் பகுதி திருநள்ளாறு சாலையில் 43 ஆண்டுகளாக இயங்கிவரும் சாந்தி ஜூவல்லரியில் கடந்த 1-ஆம் தேதி முதல் ஆடி மாத தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளா்களுக்கு, நிறுவன உரிமையாளா்கள் எஸ். செல்வராஜ், எஸ். கண்ணன் மற்றும் எஸ். ராம்பிரசன்னா ஆகியோா் தேசியக் கொடியை இலவசமாக வழங்கி வருகின்றனா்.
இதுகுறித்து உரிமையாளா்கள் சனிக்கிழமை கூறுகையில், தள்ளுபடி சலுகைகளால் வாடிக்கையாளா்கள் மகிழ்வது ஒருபுறமிருந்தாலும், தேசத்தின் சுதந்திர திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளா்களுக்கு இலவசமாக தேசியக் கொடியை வழங்கி, வீடுகளில் ஏற்றுமாறு அறிவுறுத்துகிறோம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

தொகுதி மறுவரையறையால் நிரந்தரமாக ஆட்சியை கைபெற்றுவதற்கு முயற்சி: பழ. நெடுமாறன்
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


