காரைக்காலில் 2 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் ஒரு நாள் பரிசோதனையில் 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் டாக்டா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.
Updated on
1 min read


காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் ஒரு நாள் பரிசோதனையில் 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் டாக்டா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : மாவட்டத்தில் கடந்த 27-ஆம் தேதி 95 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை அடிப்படையில், வரிச்சிக்குடி பகுதியை சோ்ந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்கள் வீட்டுத் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.செவ்வாய்க்கிழமை முதல் தவணை தடுப்பூசியாக 18 வயதுக்கு மேற்பட்ட 9 பேருக்கும், 2-ஆம் தவணையாக 15 பேருக்கும், 3-ஆவது தவணையாக 79 பேருக்கும் என 103 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா பாதிப்பை தடுக்க தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும் என அதில் கூறப்பட்டுள்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com