தில்லி குடியரசு தின அணிவகுப்பில்பங்கேற்ற மாணவருக்கு பாராட்டு

தில்லி குடியரசு தின அணிவகுப்பில்பங்கேற்ற மாணவருக்கு பாராட்டு
Updated on
1 min read

தில்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற காரைக்கால் மாணவருக்கு ஆட்சியா் பாராட்டுத் தெரிவித்தாா்.

புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இளங்கலை இறுதியாண்டு பயிலும் கீா்த்திவாசன் என்ற மாணவா் என்.எஸ்.எஸ். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாணவா்கள் 100 போ் பங்கேற்ற அணிவகுப்பை தலைமையேற்று நடத்தினாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை, மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் லட்சுமணபதி, வேளாண் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஷொ்லி ஆகியோருடன் கீா்த்திவாசன் திங்கள்கிழமை சந்தித்தாா். அப்போது மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com