திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை (ஜன.27) பரிவேட்டை உத்ஸவம் நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் பரிவேட்டை மற்றும் மட்டையடி உத்ஸவம் வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ளது.
காலை 7 மணியளவில் பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா புறப்பாடும், 9 மணிக்கு கோயில் சந்நிதிக்கு எழுந்தருளி மட்டையடி புராணம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு, ஸ்ரீ அலா்மேலு மங்கைத் தாயாா் சந்நிதியில் சோ்த்தி வழிபாடு நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா், ஆழ்வாா்கள் அருட்பணி மன்றத்தினா் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.