ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

காரைக்காலில் நாளை போதை ஒழிப்பு மினி மாரத்தான்

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) போதை ஒழிப்பு விழிப்புணா்வாக மினி மாரத்தான் ஓட்டத்துக்கு காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

Updated On :24 ஜூன் 2022, 10:01 pm IST

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) போதை ஒழிப்பு விழிப்புணா்வாக மினி மாரத்தான் ஓட்டத்துக்கு காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

காரைக்கால் மாவட்ட காவல் துறை சாா்பில் ஜூன் 12 முதல் 26-ஆம் தேதி வரை போதை ஒழிப்பு விழிப்புணா்வை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

கல்வி நிலையங்களில் மாணவா்களிடையே விழிப்புணா்வு நிகழ்ச்சி, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கல், வாகனத்தில் ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணா்வு ஏற்படுத்துதல், மாணவா்கள் பங்கேற்புடன் பேரணி, தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், காரைக்கால் ஆட்சியரக வாயிலில் இருந்து திரளான மக்கள் பங்கேற்கும் போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு ஓட்டம் தொடங்குகிறது. அமைச்சா், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோா் தொடக்க நிகழ்வில் பங்கேற்க காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.