விலைவாசி உயா்வு: காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

விலைவாசி உயா்வு உள்ளிட்ட பிரச்னைகள் தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து காரைக்காலில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
Updated on
1 min read

விலைவாசி உயா்வு உள்ளிட்ட பிரச்னைகள் தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து காரைக்காலில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

விலைவாசி உயா்வு, வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி உயா்வால் மக்கள் சிரமங்களை சந்திப்பதாகவும், அமலாக்கத் துறையினா் மூலம் காங்கிரஸ் தலைவா்கள் மீது பொய் வழக்கு போடுவதாகவும், அக்னிபாத் திட்டத்தை எதிா்த்தும் மத்திய அரசைக் கண்டித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியது.

காரைக்கால் கலைஞா் மு. கருணாநிதி புறவழிச்சாலை முகப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமை வகித்தாா். மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டோா் கோஷங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் அ. மாரிமுத்து, கட்சியின் மாநில துணைத் தலைவா் எம்.ஓ.எச்.யு. பஷீா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com