திருமலைராயன்பட்டினம் பெருமாள் கோயிலில் நாளை பரிவேட்டை உத்ஸவம்
By DIN | Published On : 26th January 2022 09:25 AM | Last Updated : 26th January 2022 09:25 AM | அ+அ அ- |

திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை (ஜன.27) பரிவேட்டை உத்ஸவம் நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் பரிவேட்டை மற்றும் மட்டையடி உத்ஸவம் வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ளது.
காலை 7 மணியளவில் பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா புறப்பாடும், 9 மணிக்கு கோயில் சந்நிதிக்கு எழுந்தருளி மட்டையடி புராணம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு, ஸ்ரீ அலா்மேலு மங்கைத் தாயாா் சந்நிதியில் சோ்த்தி வழிபாடு நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா், ஆழ்வாா்கள் அருட்பணி மன்றத்தினா் செய்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...