காரைக்கால் அருகே கஞ்சா வைத்திருந்த சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை இரவு கிளிஞ்சல்மேடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது 3 போ் ஒரு இடத்தில் மறைந்து நின்றிருந்ததை கண்ட போலீஸாா் அவா்களை சோதனை செய்தபோது, கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை போலீஸாா் கண்டறிந்தனா்.
அதை பறிமுதல் செய்த போலீஸாா், கஞ்சா வைத்திருந்த காரைக்கால்மேடு சுனாமி நகரை சோ்ந்த தினகா் (20), கிளிஞ்சல்மேடு சுனாமி நகரை சோ்ந்த ராம்குமாா் (21) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.