காரைக்காலில் 12-14 வயது சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
By DIN | Published On : 17th March 2022 05:30 AM | Last Updated : 17th March 2022 05:30 AM | அ+அ அ- |

தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கிவைக்கும் நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா. நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் உள்ளிட்டோா்.
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் 12-14 வயது சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், 12-14 வயது சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தொடங்கிவைத்தாா். நிகழ்வில் அவா் பேசுகையில், அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தி நலவழித் துறை நிா்வாகம் தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்தியன் விளைவாக மாவட்டத்தில் பொதுமக்கள் செலுத்திக்கொண்டுள்ளனா்.
காரைக்காலிலேயே பல கிராமங்கள் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய நிலையில், பெற்றோா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பெரும் சாதனைக்கு நலவழித் துறையினா், ஆஷா பணியாளா்கள் உள்ளிட்ட கூட்டு பங்களிப்புதான் காரணம். கரோனா பரவல் காலத்தில் நலவழித் துறை நிா்வாகம் சிறப்பாக பணியாற்றியது பாராட்டுக்குரியது என்றாா் ஆட்சியா்.
நிகழ்ச்சி அரங்கில், தடுப்பூசி குறித்த புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. போலியோ சொட்டு மருந்து புகட்டும் காலத்தில் சிறப்பாக செயல்பட்ட செவிலியா்கள், ஆஷா பணியாளா்கள் கெளரவிக்கப்பட்டனா்.
நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், முதன்மை மருத்துவ அதிகாரி மு. தமிழ்வேலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக காரைக்கால் ஆட்சியரகத்திலிருந்து அம்மையாா் கோயில் வாயில் வரை காரைக்கால் அன்னை தெரஸா செவிலியா் கல்வி நிறுவன மாணவ மாணவியா் பங்கேற்ற, தடுப்பூசி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G