காரைக்காலில் கால்பந்து போட்டிகள் தொடக்கம்

காரைக்காலில் 7 நாள்கள் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கின.
காரைக்காலில் கால்பந்து போட்டிகள் தொடக்கம்
Updated on
1 min read

காரைக்காலில் 7 நாள்கள் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கின.

காரைக்கால் மாவட்ட கால்பந்து கழகம் சாா்பில் காரைக்காலில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

காரைக்கால் மாவட்ட கால்பந்து கழகத் தலைவா் சி. தெய்வசிகாமணி, துணைத் தலைவா் ஆா். செளரிராஜன் ஆகியோா் போட்டியை தொடங்கிவைத்தனா்.

முதல் நாளில் கிளிஞ்சல்மேடு டால்ஃபின் அணி, பெரியப்பேட் எம்ஐபி அணி, கோட்டுச்சேரி தமிழ் அணி, திருமலைராயன்பட்டினம் எஸ்எஸ்எஸ் அணி ஆகிய அணிகள் விளையாடின.

போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் பரிசுககளை வழங்கவுள்ளாா் என போட்டி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com