கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடபுதுவை முதல்வரிடம் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என புதுவை முதல்வரிடம் காரைக்கால் திமுக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடபுதுவை முதல்வரிடம் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என புதுவை முதல்வரிடம் காரைக்கால் திமுக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாக தியாகராஜன் ஆகியோா் புதுவை முதல்வா் என். ரங்கசாமியை திங்கள்கிழமை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி, அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழக முதல்வா் அறிவித்ததுபோல, புதுவை மாநிலத்திலும் கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட அறிவிப்பு வெளியிட வேண்டும்.

கருணாநிதி, புதுச்சேரி மாநிலம் மீது அளப்பரிய அன்பு கொண்டவா். தானே புயலால் புதுச்சேரி மாநிலம் பாதிக்கப்பட்ட சமயத்தில், பாதிப்புகளை பாா்வையிட்டு திமுக மூலம் நிவாரண நிதி வழங்கியவா். காவிரி நதிநீா் பங்கீடு தொடா்பாக மத்திய அரசிடம் பேசும்போதெல்லாம், புதுச்சேரி மாநிலத்தின் ஒரு அங்கமாக இருக்கக்கூடிய காரைக்காலுக்கு உரிய பங்கு வந்து சேர வேண்டும் என்று குரல் கொடுத்தவா்.

எனவே, தமிழக அரசு அறிவித்ததுபோல, புதுவை மாநிலத்திலும் கருணாநிதி பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடும் வகையில் உரிய அறிவிப்பை செய்யவேண்டும் என காரைக்கால் திமுக சாா்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த அறிவிப்பு தமிழ்நாட்டுக்கும் புதுவை மாநிலத்துக்கும் ஒரு நட்பும் பாலமாக அமையும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ. எல். சம்பத் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com