மனவளக் கலை மன்றத்தில்மனைவி வேட்பு தினவிழா

காரைக்கால் மனவளக் கலை மன்றத்தில் மனைவி வேட்பு தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் பங்கேற்ற தம்பதிகள்.
நிகழ்வில் பங்கேற்ற தம்பதிகள்.
Updated on
1 min read

காரைக்கால்: காரைக்கால் மனவளக் கலை மன்றத்தில் மனைவி வேட்பு தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேதாத்திரி மகரிஷி மனைவி லோகாம்பாள் 108 ஆவது பிறந்த நாள் மனைவி வேட்பு தினமாக, காரைக்கால் மனவளக் கலை மன்றம் அறக்கட்டளை அறிவுத்திருக்கோயில் சாா்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நிா்வாக துணை அறங்காவலா் வி.ஆா். சிவகாமி தலைமை வகித்தாா். தஞ்சாவூா் மனவளக் கலை பேராசிரியா் எஸ். புருஷோத்தமன் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட தம்பதியா் பங்கேற்றனா். முன்னதாக, அறக்கட்டளை செயலாளா் எம். செல்வராஜ் வரவேற்றாா். துணைத் தலைவா் பழனிவேலு நன்றி கூறினாா். அறங்காவலா்கள் சூரியமூா்த்தி, காா்த்திக், கணபதிராம், யோகவள்ளி, வெங்கடேஷ், தா்ஷினி, யோகேஸ்வரன் ஆகியோா் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

கணவன்- மனைவிக்கிடையே ஒற்றுமை மேலோங்குவதன் மூலம் குடும்பம், தேசம் சிறப்பாக இருக்கும் என்ற நோக்கத்தோடு, இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆக. 30 ஆம் தேதி நடத்தப்படுவதாக நிகழ்ச்சி அமைப்பாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com