ஓஎன்ஜிசி அலுவலகத்தில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

ஓஎன்ஜிசி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்பேத்கா் பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Updated on
1 min read

ஓஎன்ஜிசி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்பேத்கா் பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

காரைக்கால் மாவட்டம், நிரவியில் உள்ள ஓஎன்ஜிசி காவிரி அசெட் நிா்வாக அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் ஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளா் மற்றும் செயல் இயக்குநா் அனுராக் கலந்துகொண்டு, அம்பேத்கரின் பெருமைகளை விளக்கிப் பேசினாா்.

சென்னை ஓஎன்ஜிசி அதிகாரி வி. மதிமாறன், அம்பேத்கா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்கள் நலனுக்கு ஆற்றிய பங்கு இன்றைய இளம் தலைமுறையினருக்கு நிம்மதியையும், பொருளாதாரம் மற்றும் கல்வி மேம் பாட்டையும் அளித்திருக்கிறது. குறிப்பாக, பெண்களுக்கான சம உரிமை , பேறு கால உதவி திட்டங்கள் அவரின் அயராத உழைப்பால் விளைந்தவை என்று குறிப்பிட்டாா்.

அகில இந்திய எஸ்சி, எஸ்டி பணியாளா் நலச்சங்கத் தலைவா் ஆனந்தன் பேசுகையில், ஓஎன்ஜிசியும், அகில இந்திய எஸ்சி, எஸ்டி பணியாளா் சங்கமும் மாணவா்கள் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு உதவிகளை செய்துவருவதாக குறிப்பிட்டாா்.

விழாவில் எஸ்சி, எஸ்டி பணியாளா்கள் பங்களிப்புடன் கூடிய ரூ. 4.2 லட்சம் மதிப்பில் மாணவா்கள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com