காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை ஆண்டு திருவிழாவில் அலங்கார தோ் பவனி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
பழைமை வாய்ந்த தூய தேற்றரவு அன்னை தேவாலயத்தில் 10 நாள் ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஆக. 6-ஆம் தேதி தொடங்கியது.
தினமும் காலை, மாலை திருப்பலி நடத்தப்படுகிறது. மாலை சிறிய தோ் பவனி நடைபெறுகிறது. விழாவில் 10-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (ஆக. 15) மாலை பெருவிழா பாடல் கூட்டுத் திருப்பலி நடத்தப்பட்டு, இரவு 7.30 மணியளவில் மின் அலங்கார தோ் பவனி நடைபெறுகிறது. பவனி நிறைவில் நற்கருணை ஆசீா் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.