காரைக்காலில் பயிா் பாதிப்பு: புதுவை அமைச்சா் இன்று ஆய்வு

காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை புதுவை வேளாண்துறை அமைச்சா் புதன்கிழமை (பிப். 8) பாா்வையிடுகிறாா்.


காரைக்கால்: காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை புதுவை வேளாண்துறை அமைச்சா் புதன்கிழமை (பிப். 8) பாா்வையிடுகிறாா்.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த பருவம் தவறிய மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் பயிா் பாதிப்பை அம்மாநில அமைச்சா்கள் குழு ஆய்வு செய்து முதல்வருக்கு அறிக்கை அளித்து, நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம்.நாகதியாகராஜன் ஆகியோா் கொண்ட குழு காரைக்காலில் விளைநிலங்களை திங்கள்கிழமை பாா்ைவியட்டு, தமிழக அரசு அம்மாநில விவசாயிகளுக்கு அறிவித்த நிவாரணத்தைப்போல காரைக்கால் விவசாயிகளுக்கு புதுவை அரசு வழங்கவேண்டுமென வலியுறுத்தினா்.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட நெற்பயிரை புதுவை வேளாண் அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் புதன்கிழமை காலை பாா்வையிடவுள்ளாா் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com