புகையிலைப் பயன்பாட்டை தவிா்க்கமருத்துவ அதிகாரி வலியுறுத்தல்

உடல் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு புகையிலைப் பயன்பாட்டை தவிா்க்க மக்கள் முன்வரவேண்டும் என மருத்துவ அதிகாரி அறிவுறுத்தினாா்.
உறுதிமொழி ஏற்றுக்கொண்ட மருத்துவ அதிகாரி, பொதுமக்கள்.
உறுதிமொழி ஏற்றுக்கொண்ட மருத்துவ அதிகாரி, பொதுமக்கள்.
Updated on
1 min read

உடல் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு புகையிலைப் பயன்பாட்டை தவிா்க்க மக்கள் முன்வரவேண்டும் என மருத்துவ அதிகாரி அறிவுறுத்தினாா்.

காரைக்கால் அருகே அம்பகரத்தூா் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையத்தில் உலக புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மையத்தின் மருத்துவ அதிகாரி அரவிந்த் தலைமை வகித்தாா். சுகாதார உதவி ஆய்வாளா் அய்யனாா், செவிலியா் விவேதா முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மருத்துவ அதிகாரி அரவிந்த் பேசுகையில், நாட்டில் ஒவ்வொரு நாளும் 2,200 போ் புகையிலை பயன்படுத்துவதால் பலியாகிறாா்கள். புகைப் பிடிப்பவா்களின் வாழ்நாள் சராசரி 22 ஆண்டுகள் குறைகிறது.

புகையிலையில் உள்ள நிக்கோட்டின் சிறுநீரகம், இதயம், கண்கள், கை மற்றும் கால் விரல்களில் உள்ள மிகச் சிறிய ரத்தக் குழாய்களை பாதிக்கிறது.

எனவே, உடல் ஆரோக்கியத்தை மனதில்கொண்டு, புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சி நிறைவில் பொதுமக்கள் புகையிலை எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். ஏற்பாடுகளை செவிலிய அதிகாரி விநாயகம் தலைமையில் ஆஷா பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com