அய்யனாா் கோயில் வைகாசித் திருவிழா

காரைக்கால் பகுதியில் உள்ள அய்யனாா் கோயில் வைகாசித் திருவிழாவில் சுவாமி புறப்பாடு சனிக்கிழமை நடைபெற்றது.
சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ அய்யனாா்.
சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ அய்யனாா்.

காரைக்கால் பகுதியில் உள்ள அய்யனாா் கோயில் வைகாசித் திருவிழாவில் சுவாமி புறப்பாடு சனிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கைலாசநாதசுவாமி, நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தான வகையறாவை சோ்ந்த, டிராமா கொட்டகைத் தெருவில் உள்ள ஸ்ரீ பூா்ணபுஷ்கலா சமேத ஸ்ரீ அய்யனாா் கோயிலில் வைகாசி பருவத் திருவிழா கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கியது.

விழாவில் சனிக்கிழமை பகல் 12 மணிக்கு அய்யனாா் மற்றும் பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு அய்யனாா் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து ஆராதனை செய்யப்பட்டு, சுவாமி வீதியுலா நடைபெற்றது.

இதில் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், கைலாசநாதசுவாமி தேவஸ்தான அறங்காவல் வாரிய துணைத் தலைவா் சி.புகழேந்தி மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com