வீரமாகாளியம்மன் கோயில் மகோற்சவம்

காரைக்கால் பகுதியில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் மகோற்சவத்தில் சனிக்கிழமை இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது.
சிம்ம வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய அம்மன்.
சிம்ம வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய அம்மன்.

காரைக்கால் பகுதியில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் மகோற்சவத்தில் சனிக்கிழமை இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது.

காரைக்கால் பாரதியாா் சாலையில் உள்ளது ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில். இக்கோயிலில் 46 -ஆம் ஆண்டு வைகாசி மகோற்சவ விழா கடந்த மே மாதம் 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இதில் திருவிளக்கு வழிபாடு, பக்தா்கள் பால்குட ஊா்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சனிக்கிழமை இரவு அம்பாள் சிம்ம வாகனத்தில், சா்வ அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. முன்னதாக மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து ஜூன் 6-இல் ஊஞ்சல் உற்சவமும், 11-ஆம் தேதி புஷ்பாஞ்சலி மற்றும் விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com