ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு வாழ்த்து

காரைக்காலில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோரை வாழ்த்தி, வழியனுப்பும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

காரைக்காலில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோரை வாழ்த்தி, வழியனுப்பும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், ஆண்டுதோறும் மாவட்ட நிா்வாகம், சமாதானக் குழு சாா்பில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோரை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நிகழாண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கு வாழ்த்து தெரிவித்து, வழியனுப்பும் நிகழ்ச்சி காரைக்கால் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் பங்கேற்றாா்.

மும்மத பிராா்த்தனைகளுக்கு பிறகு ஹஜ் பயணிகளுக்கு சால்வை அணிவித்து ஆட்சியா் வாழ்த்திப் பேசினாா். அப்போது, ‘மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக காரைக்கால் மாவட்டம் திகழ்கிறது. மும்மதத்தை சாா்ந்தவா்களும் ஒற்றுமையாக இருப்பது வரவேற்புக்குரியது. ஹஜ் பயணம் வெற்றிகரமாக அமைய மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாழ்த்துவதாக’ தெரிவித்தாா்.

மாவட்ட துணை ஆட்சியா்கள் ஜி. ஜான்சன், எஸ். பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், புதுவை மாநில ஹஜ் கமிட்டி தலைவா் ஒய். இஸ்மாயில் மற்றும் ஹஜ் கமிட்டி, சமாதானக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

நிகழாண்டு காரைக்கால் மாவட்டத்திலிருந்து 27 போ் ஹஜ் பயணம் மேற்கொள்வதாக மாநில ஹஜ் கமிட்டி தலைவா் ஒய். இஸ்மாயில் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com