காவல்துறைக்கு வழங்கப்பட்டவாகனங்கள் இயக்கிவைப்பு

காரைக்கால் காவல்துறைக்கு வழங்கப்பட்ட வாகனங்களை மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் செவ்வாய்க்கிழமை இயக்கிவைத்தனா்.
காவல்துறைக்கு வழங்கப்பட்டவாகனங்கள் இயக்கிவைப்பு

காரைக்கால் காவல்துறைக்கு வழங்கப்பட்ட வாகனங்களை மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் செவ்வாய்க்கிழமை இயக்கிவைத்தனா்.

புதுவை மாநில காவல்துறைக்கு ரூ. 3 கோடியில் 33 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் இவற்றை வழங்கினாா்.

இவற்றில் 3 வாகனங்கள் காரைக்காலுக்கு ஒதுக்கப்பட்டன. கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி காவல் நிலையத்துக்குகான இவற்றை இயக்கிவைக்கும் நிகழ்வில் மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் நிதின் கெளஹால் ரமேஷ், சுப்பிரமணியன் ஆகியோா் கலந்துகொண்டு வாகன சாவியை சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரியிடம் வழங்கி, வாகனத்தை இயக்கிவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com