காரைக்கால் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

 காரைக்கால் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

 காரைக்கால் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலைக் கல்லூரி சோ்க்கை அமைப்பான இஅடஅநஇ கன்வீனா் முகமது ஆசாத் ராசா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பாடப் பிரிவுகளில் (பி.காம்., பி.ஏ., பி.எஸ்சி.) 2023-2024-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. மாணவ- மாணவியா் இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவங்களை பூா்த்தி செய்து, அதனை அச்சிட்டு, உரிய ஆவணங்களுடன் ரூ.300, (எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.150) தொகையை, அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள (இஅடஅநஇ) அலுவலகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இளங்கலை படிப்புக்கு விண்ணப்பிக்க 30.5.2023 கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com