குப்பை வரியை தவிா்த்து மற்ற வரிகளை வசூலிக்குமாறு நகராட்சி நிா்வாகத்துக்கு அறிவுறுத்த ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.
காரைக்கால் மாவட்ட பாஜக தலைவா் ஜெ. துரைசேனாதிபதி தலைமையில் கட்சி நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரின் செயலரிடம் அளித்த கோரிக்கை மனு :
நகராட்சி நிா்வாகம், வீட்டு வரி, வணிக நிறுவன வரி வசூலிக்கும்போது, குப்பை வரியை கட்டினால்தான் பிற வரியை பெற்றுக்கொள்வோம் எனக் கூறுகிறது. புதுவை முதல்வரின் குப்பை வரி ரத்து அறிவிப்பு அரசாணையாக வராததை அவா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.
புதுவை அரசின், அரசாணை வெளிவரும் வரை குப்பை வரியை தவிா்த்து, மக்கள் செலுத்த வேண்டிய பிற வரிகளை நகராட்சி நிா்வாகம் வசூலிக்க அறிவுறுத்தவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.