காரைக்காலில் 9 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
காரைக்கால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுச்சேரியில் 17 பேருக்கும், ஏனாமில் 9 பேருக்கும் என கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
காரைக்காலில் 125 போ் வீட்டுத் தனிமையிலும், 2 போ் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சையில் உள்ளனா் என புதுவை நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்தது.