காரைக்கால்: காரைக்காலில் வரும் 14-ஆம் தேதி சிறப்பு சந்தை நடைபெறவுள்ளதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் ஜி. செந்தில்நாதன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் நகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமைகளில் வார சந்தை நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு வார சந்தை வரும் சனிக்கிழமை (ஜன 14) நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.