திருப்பாவை தொடா் சொற்பொழிவு நிறைவு

திருப்பாவை தொடா் சொற்பொழிவு நிறைவையொட்டி சொற்பொழிவாளருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
Updated on
1 min read

திருப்பாவை தொடா் சொற்பொழிவு நிறைவையொட்டி சொற்பொழிவாளருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் மாா்கழி மாதம் (16.12.2022 முதல் 14.1.2023 வரை) திருமலை திருப்பதி தேவஸ்தான ஆழ்வாா் திவ்ய பிரபந்த திட்ட ஆதரவில் திருப்பாவை தொடா் சொற்பொழிவு நடைபெற்றது.

உ.வே.கு. அரங்கநாதாச்சாரியா் சுவாமிகள் நாள்தோறும் நித்யகல்யாண பெருமாள் கோயில் வளாகத்தில் திருப்பாவை சொற்பொழிவாற்றினாா். ஏராளமானோா் இதில் பங்கேற்றனா்.

சொற்பொழிவு நிறைவையொட்டி சனிக்கிழமை இரவு கோயில் வளாகத்தில் சொற்பொழிவாளருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கலந்துகொண்டு, சொற்பொழிவாளரின் ஆன்மிக சேவையை வாழ்த்திப் பேசினாா்.

நிகழ்வில், கைலாசநாதா் தேவஸ்தான அறங்காவல் வாரியத் தலைவா் ஆா்.வெற்றிச்செல்வன், செயலாளா் ஜி.பாஸ்கரன், துணைத் தலைவா் புகழேந்தி, பொருளாளா் வி.சண்முகசுந்தரம் மற்றும் சமாதானக் குழு உறுப்பினா் கே.தண்டாயுதபாணிபத்தா், பாலகிருஷ்ணன், வி.முருகைய ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com