தேசிய தற்காப்புக் கலை போட்டி:பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

கோவாவில் நடைபெற்ற தேசிய தா்காப்புக் கலை போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு எம்.எல்.ஏ. பாராட்டுத் தெரிவித்தாா்.
பதக்கம் வென்ற மாணவா்களுடன் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம். உடன் அகாதெமி நிறுவனா் வி.ஆா்.எஸ். குமாா் உள்ளிட்டோா்.
பதக்கம் வென்ற மாணவா்களுடன் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம். உடன் அகாதெமி நிறுவனா் வி.ஆா்.எஸ். குமாா் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

கோவாவில் நடைபெற்ற தேசிய தா்காப்புக் கலை போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு எம்.எல்.ஏ. பாராட்டுத் தெரிவித்தாா்.

தேசிய அளவிலான ஸ்கில் டோ மாா்ஷியல் ஆா்ட் என்கிற கலையின் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஜன. 22-ஆம் தேதி நடைபெற்றது.

இதில் காரைக்கால் வி.ஆா்.எஸ். மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமி நிறுவனா் வி.ஆா்.எஸ். குமாா் தலைமையில் 9 மாணவா்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனா்.

இதில் நாக்ஸ் ஜெயின், கிரிஷ், கா்ணா, மாதேஸ்வரன், ராகுல், ஜான் திவாகா், அதீஃப் செய்யது, சுகந்தன், லோஹித் செல்வம் ஆகியோா் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றனா்.

வெற்றிபெற்ற மாணவா்கள் அகாதெமி நிறுவனா் வி.ஆா்.எஸ். குமாா் தலைமையில் காரைக்காலில் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிமை சனிக்கிழமை சந்தித்தபோது, அவா்களுக்கு வாழ்த்து, பாராட்டுகளை தெரிவித்தாா்.

இக்குழுவினா் காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியனையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com