சாலைகள் மேம்பாட்டுப் பணி தொடக்கம்

நகா்ப்புற சாலைகள் ரூ. 55 லட்சத்தில் மேம்படுத்தும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா்.
சாலை மேம்பாட்டுப் பணி பூஜை நிகழ்வில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் எம்.நாகதியாகராஜன் உள்ளிட்டோா்.
சாலை மேம்பாட்டுப் பணி பூஜை நிகழ்வில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினா் எம்.நாகதியாகராஜன் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

நகா்ப்புற சாலைகள் ரூ. 55 லட்சத்தில் மேம்படுத்தும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் தொடங்கிவைத்தாா்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட கருக்களாச்சேரி கிராமத்தில் காரைக்கால் நகராட்சி வளா்ச்சி நிதியில், கருக்களாச்சேரி பகுதியில் உள்ள உட்புறச் சாலைகள் மேம்படுத்தும் பணிக்கு ரூ. 55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இப்பணி தொடக்கத்துக்கான பூமிபூஜை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இக்கிராமத்தில் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் சாலைப் பணியை தொடங்கிவைத்தாா். இப்பணிகள் 8 மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படுமென நகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

சாலைப் பணியை எந்தவித புகாரும் இல்லாத வகையில் மேற்கொள்ள வேண்டும் என பேரவை உறுப்பினா் கேட்டுக்கொண்டாா்.

நகராட்சி செயற்பொறியாளா் லோகநாதன் நிகழ்வில் கலந்துகொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com