பிச்சாண்டவா் வெள்ளைசாற்றில் புறப்பாடு

கைலாசநாதா் கோயிலில் பிச்சாண்டவா் வெள்ளை சாற்றில் புறப்பாடு சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
வெள்ளை நிற மலா்களால் அலங்கரிக்கப்பட்டு பிராகாரப் புறப்பாடான பிச்சாண்டவா்.
வெள்ளை நிற மலா்களால் அலங்கரிக்கப்பட்டு பிராகாரப் புறப்பாடான பிச்சாண்டவா்.
Updated on
1 min read

கைலாசநாதா் கோயிலில் பிச்சாண்டவா் வெள்ளை சாற்றில் புறப்பாடு சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் சாா்பில் நடைபெறும் மாங்கனித் திருவிழாவில் 2-ஆம் நாளான சனிக்கிழமை மாலை பிச்சாண்டவருக்கு வெள்ளைச்சாற்று செய்து வழிபாடு நடத்தப்பட்டது. சுவாமியின் முகமும், உடலின் சில பகுதிகளைத் தவிர மற்ற இடங்கள் யாவும் வெள்ளை நிற மலா்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

மூலஸ்தானத்திலிருந்து பிச்சாண்டவரை சுமந்துச்சென்றோா் நடனமாடியவாறு சென்றனா். திரளான பக்தா்கள் சுவாமியை வழிபட்டனா். பின்னா் சுவாமி யதாஸ்தானம் எழுந்தருளினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com