அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அங்கன்வாடி ஊழியா் சங்க தலைவா் முத்துலட்சுமி தலைமை வகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன், பொது செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன், புதுச்சேரி அங்கன்வாடி ஊழியா் சங்க அமைப்பு செயலாளா் லலிதா ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

அங்கன்வாடி ஊழியா்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாத இறுதியில் தவறாமல் ஊதியம் வழங்கவேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கையின் அடிப்படையில் கௌரவ ஊழியா்களை பணி நிரந்தரம் செய்யும் வரை குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்.

மதிப்பெண் தகுதி அடிப்படையில் முறையாக எடுக்கப்பட்ட ஒப்பந்த அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களை கௌரவ ஊழியா்களாக அறிவித்து அவா்களது பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

பணியில் இறந்த ஊழியா் மற்றும் உதவியாளா்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com