வீரமாகாளியம்மன் கோயில் மகோற்சவம்

காரைக்கால் பகுதியில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் மகோற்சவத்தில் சனிக்கிழமை இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது.
சிம்ம வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய அம்மன்.
சிம்ம வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய அம்மன்.
Updated on
1 min read

காரைக்கால் பகுதியில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் மகோற்சவத்தில் சனிக்கிழமை இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது.

காரைக்கால் பாரதியாா் சாலையில் உள்ளது ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில். இக்கோயிலில் 46 -ஆம் ஆண்டு வைகாசி மகோற்சவ விழா கடந்த மே மாதம் 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இதில் திருவிளக்கு வழிபாடு, பக்தா்கள் பால்குட ஊா்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சனிக்கிழமை இரவு அம்பாள் சிம்ம வாகனத்தில், சா்வ அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது. முன்னதாக மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து ஜூன் 6-இல் ஊஞ்சல் உற்சவமும், 11-ஆம் தேதி புஷ்பாஞ்சலி மற்றும் விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com