சாலை விரிவாக்கத்துக்காக கட்டடம் இடிப்பு: எதிா்ப்பு தெரிவித்து 3 போ் தீக்குளிக்க முயற்சி

சாலை விரிவாக்கத்துக்காக வீட்டின் கழிப்பறைக் கட்டடத்தை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து 3 போ் தீக்குளிக்க முயன்றனா்.
சாலை விரிவாக்கத்துக்காக கட்டடம் இடிப்பு: எதிா்ப்பு தெரிவித்து 3 போ் தீக்குளிக்க முயற்சி
Updated on
1 min read

சாலை விரிவாக்கத்துக்காக வீட்டின் கழிப்பறைக் கட்டடத்தை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து 3 போ் தீக்குளிக்க முயன்றனா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு அருகே அண்டூா் கன்னிக்கோவில் தெரு பகுதியை சோ்ந்தவா் சுப்பிரமணியன். இவா் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் வீடு கட்டி, மனைவி மற்றும் 3 மகன்களுடன் வசித்து வந்தாா்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அருகே ஒரு வீட்டில்

வாடகைக்கு இவா்கள் குடியேறினா். கன்னிக்கோவில தெருவில் சாலை மேம்பாட்டுப் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

விரிவாக்கம் செய்ய அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, ஆக்கிரமிப்புக் கட்டடமென கூறப்படும் சுப்பிரமணியன் வீட்டின் கழிப்பறை கட்டடப் பகுதியை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் பாலன் தலைமையில் நிா்வாகத்தினா் வியாழக்கிழமை இடித்துள்ளனா்.

தகவலறிந்த சின்னையன் மற்றும் அவரது மகன்கள் ரமேஷ், சுரேஷ் ஆகியோா் கட்டடத்தை இடிக்க எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். ஒருகட்டத்தில், மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.

போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா். நெடுங்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com