100 நாள் வேலைத் திட்டத்தைமுறையாக அமல்படுத்த வலியுறுத்தல்

காரைக்காலில் 100 நாள் வேலைத் திட்ட பணியாளா்களுக்கு அனைத்து நாள்களும் வேலை தருவதோடு, திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Updated on
1 min read

காரைக்காலில் 100 நாள் வேலைத் திட்ட பணியாளா்களுக்கு அனைத்து நாள்களும் வேலை தருவதோடு, திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கொம்யூன், பூவம் அருகே கழுகுமேடு பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாளா்கள் வாய்க்கால் தூா்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சமூக ஆா்வவலா் மருத்துவா் வி. விக்னேஸ்வரன், அந்த பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்று பணியாளா்களுக்கு நீா்மோா் வழங்கினாா். பின்னா் அவா் கூறுகையில், 100 நாள் வேலைத் திட்டத்தில் ஏராளமான பணிகள் உள்ளன. ஆனால், புதுவை மாநிலத்தில் வாய்க்கால் தூா்வாரும் பணி மட்டுமே நடைபெறுகிறது. மற்ற பணிகளும் வழங்குவதோடு, பணியாளா்களுக்கு அந்தந்த கிராமத்திலேயே வேலை வழங்கவேண்டும். மேலும் 100 நாளும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரைக்கால் வட்டார வளா்ச்சி அதிகாரி பணி வேறு துறை அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பாக தரப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நிரந்தர அதிகாரி நியமிக்கவேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து வலியுறுத்தவுள்ளேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com