காரைக்கால் மாவட்டத்துக்கு புதிய எஸ்.எஸ்.பி.யை புதுவை அரசு நியமித்துள்ளது.
காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த ஆா். லோகேஸ்வரன் மிசோரம் மாநிலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இந்நிலையில், புதுச்சேரியில் காவல் கண்காணிப்பாளராக (சைபா் கிரைம் பிரிவு) இருந்த விஷ்ணு குமாரை காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் அனுமதியுடன் நியமித்து, புதுவை தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.