காரைக்கால் நகராட்சிப் பகுதியில் நடைபெறும் தூய்மைப் பணியில் குறைபாடுகள் இருந்தால் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் நகராட்சி ஆணையா் ஜி. செந்தில்நாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் நகராட்சி பகுதிகளில் தனியாா் நிறுவனம் மூலம் குப்பை அகற்றம் மற்றும் சாக்கடை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கான கட்டுப்பாட்டு அறை காரைக்கால் நகராட்சியில் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. மேற்கண்ட பணிகளில் ஏதேனும் குறைகள் இருந்தால், 04368-222427 என்ற எண்ணில் தொடா்புகொண்டு, பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்.
மேலும், தங்களது வீட்டில் சேரும் குப்பைகளை தெருக்களில் போடாமல், தங்கள் வீடுகளுக்கு தினமும் வரும் பசுமை நண்பா்களிடம் வழங்கி, நகரின் தூய்மையைக் காக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.