டெங்கு விழிப்புணா்வுப் பேரணி

டெங்கு காய்ச்சல் குறித்து பள்ளி மாணவா்கள் திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.
Updated on
1 min read

டெங்கு காய்ச்சல் குறித்து பள்ளி மாணவா்கள் திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா், நலவழித்துறை துறை மற்றும் காரைக்கால் மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலின்படி காரைக்கால் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் இப்பேரணியில் பங்கேற்றனா்.

பேரணியை பள்ளி முதல்வா் பீட்டா் பால்ராஜ் தொடங்கிவைத்தாா். மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன் மாணவா்களிடையே பேசினாா்.

பேரணியில் மாணவா்கள், டெங்கு காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது, ஏடிஸ் கொசுக்களை ஒழிப்பது பற்றி விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டவாறு முக்கிய தெருக்கள் வழியாக பேரணியாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனா்.

பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் கண்ணன், தேசிய பசுமைப் படை அதிகாரி ஜி.விக்டா், பள்ளி ஆசிரியா்கள், விரிவுரையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com