காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள்

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் தொகுப்பை காரைக்கால் ஆட்சியா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்
காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப்  பொருள்கள்
Updated on
1 min read

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் தொகுப்பை காரைக்கால் ஆட்சியா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மத்திய அரசின் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் காசநோயாளிகளுக்கு உடல் ஆரோக்கியத்துக்கான ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

ஓஎன்ஜிசி நிறுவன நிதியுதவியில், காரைக்கால் மாவட்டத்தில் காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், 94 பேருக்கு ஊட்டச் சத்து தொகுப்பை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் ஆா். சிவராஜ்குமாா், நோய் தடுப்பு ஒருங்கிணைப்பாளாா் மருத்துவா் தேனாம்பிகை, காசநோய் மருத்துவா் கோகுல் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com