உலக இருதய தின விழிப்புணா்வுப் பேரணி

 உலக இருதய தினத்தையொட்டி செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.
உலக இருதய தின விழிப்புணா்வுப் பேரணி
Updated on
1 min read

 உலக இருதய தினத்தையொட்டி செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.

செப். 29-இல் உலக இருதய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் செவிலியா் கல்லூரி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் பிரெஞ்சு சிட்டி மற்றும் காரைக்கால் பகுதி செவிலியா் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியரகத்திலிருந்து மாவட்ட ஆட்சியா் (பொ) எஸ். சுபாஷ் தொடங்கிவைத்தாா்.

அன்னை தெரஸா சுகாதார பட்டமேற்படிப்பு மையம், இமாகுலேட் செவிலியா் கல்லூரியிலிருந்து சுமாா் 200 மாணவ, மாணவிகள், இருதயத்தை பாதுக்காக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, கருத்துகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டவாறு சென்றனா்.

விநாயகா மிஷன்ஸ் செவிலியா் கல்லூரி முதல்வா் கே. கமலா வரவேற்றாா். ரேட்டரி கிளப் தலைவா் கே. குமரேசன், செயலா் பி.சிவகுமாா், பொருளாளா் பி.செந்தில்குமாா் ஆகியோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com