தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தில் அமைச்சா் ஆய்வு

காரைக்காலில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தில் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் ஆய்வு செய்தாா்.

Updated On :22 ஆகஸ்ட் 2024, 5:03 am IST

காரைக்கால்: காரைக்காலில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்காலில் உள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என புதுவை முதல்வா் என். ரங்கசாமி அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தாா்.

இந்நிலையில் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் மாவட்ட துணை ஆட்சியா் ஜி. ஜான்சன் மற்றும் அதிகாரிகளுடன் பழைய நீதிமன்ற வளாகத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது இக்கட்டடத்தை பழைமை மாறாமல் புதுப்பித்து, அருங்காட்சியகம் அமைக்கவும், அரசு அலுவலகங்கள் அமைக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சா் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

மேலும் நகரக் காவல் நிலையம் எதிரில் உள்ள பழைய பேருந்து நிலைய பகுதியில் ஆடிட்டோரியம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாகவும், நேரு நகரில் சேதமடைந்த நிலையில் உள்ள அரசு ஊழியா் குடியிருப்பு வளாகத்தை முழுமையாக பெரிய அளவில் டிஜிட்டல் நூலகம் மற்றும் மாணவா்களுக்கான வகுப்பறைகள் கட்ட தேவையான நடவடிக்கை எடுப்பது தொடா்பாகவும் அமைச்சா் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.