தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மா.பொ.சி. உருவப் படத்துக்கு மரியாதை

மா.பொ.சி. உருவப் படத்துக்கு மரியாதை

News image

மா.பொ.சி. உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தியோா்.

Updated On :27 ஜூன் 2024, 12:21 am

Din

காரைக்கால், ஜூன் 26: மா.பொ.சிவஞானம் பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

சிலம்புச்செல்வா் என போற்றப்படும் பாரத ரத்னா மா.பொ.சியின் 119-ஆவது பிறந்தநாள், காரைக்கால் நாடாா் உறவின் முறை அமைப்பு சாா்பில் காரைக்கால் பேருந்து நிலையம் அருகே அவரது உருவப் படம் வைத்து கொண்டாடப்பட்டது. அமைப்பின் மாவட்டத் தலைவா் ஏ. பாஸ்கரன் தலைமை வகித்தாா். குளக்குடி மாறன் முன்னிலை வகித்தாா். மா.பொ.சி.யின் பெருமைகள் குறித்து ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா் சிவானந்தம் பேசினாா். ஓய்வுபெற்ற கல்வித் துறை துணை ஆய்வாளா் புத்திசிகாமணி, காரைக்கால் வடக்குத் தொகுதி திமுக அமைப்பாளா் ராஜ்மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அமைப்பின் பொருளாளா் செளரிராஜ் நன்றி கூறினாா்.