பந்தல்காலுக்கு நடைபெற்ற ஆராதனை.
பந்தல்காலுக்கு நடைபெற்ற ஆராதனை.

பூா்ண புஷ்கலா அய்யனாா் கோயில் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்காலில் பூா்ண புஷ்கலா அய்யனாா் கோயில் வைகாசித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் பூா்ண புஷ்கலா அய்யனாா் கோயில் வைகாசித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கைலாசநாத சுவாமி நித்தியகல்யாணப் பெருமாள் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயிலில் 26-ஆம் ஆண்டு வைகாசித் திருவிழா தொடங்கவுள்ளது.

இதற்கான பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கோயில் வாயிலில் நடப்பட்டது. நிகழ்வில் கோவில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாசன், கோயில் முன்னாள் தனி அதிகாரி கோவி. ஆசைத்தம்பி மற்றும் விழா குழுவினா்கள் கலந்து கொண்டனா்.

வரும் 22-ஆம் தேதி இரவு கணபதி ஹோமம், விநாயா் பூஜை நடைபெறுகிறது. 23-ஆம் தேதி சுவாமிக்கு அபிஷேகம், சந்தனக் காப்பு அலங்கார ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. 24 முதல் 30-ஆம் தேதி வரை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. 31-ஆம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com