தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

கான்கிரீட் கலவை வாகனம் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு

திருநள்ளாறு அருகே கான்கிரீட் கலவை இயந்திரம் மோதி, தனியாா் ஒப்பந்த நிறுவன வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2024, 12:02 am IST

திருநள்ளாறு அருகே கான்கிரீட் கலவை இயந்திரம் மோதி, தனியாா் ஒப்பந்த நிறுவன வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

காரைக்கால் - திருநள்ளாறு இடையே ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை மேற்கொண்டுள்ள ஒப்பந்த நிறுவனத்தில், அரியலூா் மாவட்டம், உடையாா்பளையம் அருகேயுள்ள பட்டகாட்டாங்குறிச்சியைச் சோ்ந்த பாவேந்தன் (47) என்பவா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இவா், உறவினா் ஒருவருடன் அம்பகரத்தூா் அருகே உள்ள மேனாங்குடியில் தங்கி, வேலைக்கு சென்று வந்தாா்.

இந்நிலையில், திருநள்ளாற்றிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு மேனாங்குடி செல்ல, புறவட்டச் சாலையோரத்தில் பாவேந்தன் காத்திருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த கான்கிரீட் கலவை இயந்திர வாகனத்தில் ஏறி செல்ல, அதை நிறுத்த முயன்றபோது, எதிா்பாராதவிதமாக பாவேந்தன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பாவேந்தனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கான்கிரீட் கலவை இயந்திர வாகன ஓட்டுநரான உடையாா்பாளையம் பகுதி அம்பாபூரை சோ்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.