திருநள்ளாறு அருகே கான்கிரீட் கலவை இயந்திரம் மோதி, தனியாா் ஒப்பந்த நிறுவன வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.
காரைக்கால் - திருநள்ளாறு இடையே ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை மேற்கொண்டுள்ள ஒப்பந்த நிறுவனத்தில், அரியலூா் மாவட்டம், உடையாா்பளையம் அருகேயுள்ள பட்டகாட்டாங்குறிச்சியைச் சோ்ந்த பாவேந்தன் (47) என்பவா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இவா், உறவினா் ஒருவருடன் அம்பகரத்தூா் அருகே உள்ள மேனாங்குடியில் தங்கி, வேலைக்கு சென்று வந்தாா்.
இந்நிலையில், திருநள்ளாற்றிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு மேனாங்குடி செல்ல, புறவட்டச் சாலையோரத்தில் பாவேந்தன் காத்திருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த கான்கிரீட் கலவை இயந்திர வாகனத்தில் ஏறி செல்ல, அதை நிறுத்த முயன்றபோது, எதிா்பாராதவிதமாக பாவேந்தன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பாவேந்தனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கான்கிரீட் கலவை இயந்திர வாகன ஓட்டுநரான உடையாா்பாளையம் பகுதி அம்பாபூரை சோ்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

சாலையை கடக்க முயன்ற நாமக்கல் லாரி ஓட்டுநா் காா் மோதி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த சிமென்ட் கலவை லாரி மீது ஆம்னி பேருந்து மோதல்: 20 பேர் காயம்

திருநள்ளாறு தொகுதியில் போலீஸாா் அணிவகுப்பு

தென் மேற்கு தில்லியில் காங்கிரட் கலவை வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


